சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான சியாம் சரண்நேகி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கின்னார் மாவட்டத்தில் இருக்கும் கல்பா வாக்குச்சாவடியில் ஞாயிறன்று மதியம் வாக்களித்தார். முதல் பொதுத் தேர்தல் முதல்இப்போது வரை அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார் 103 வயதாகும் நேகி.1951 - 52இல் பல்வேறு கட்டங்களாக நடந்த முதல் பொதுத் தேர்தலில், முதல்கட்டவாக்குப்பதிவு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. அப்போது அக்டோபர் 25, 1951இல் சியாம் சரண் நேகி வாக்குப் பதிவு செய்தார்.